Published : 13 Apr 2021 03:12 AM
Last Updated : 13 Apr 2021 03:12 AM
திருப்பூர்: அவிநாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் உதவியாளருக்கு கரோனா தொற்று உறுதியானதால், அவிநாசி வட்டாட்சியர் அலுவலகம் மூடப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் அவிநாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிந்துவந்த 58 வயது ஆண் ஒருவருக்கு, கடந்த சில நாட்களாக சளி மற்றும் இருமல் இருந்துள்ளது. கடந்த 9-ம் தேதி பரிசோதனை மேற்கொண்ட அவருக்கு 10-ம் தேதி கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அங்கு பணியில் உள்ள 40 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்படாத நிலையில், அவருடைய அலுவலகத்தில் பணிபுரிந்த 10 பேருக்கு மட்டும் 2-வது முறையாக நேற்று கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து, வட்டாட்சியர் அலுவலகத்தின் பொதுப்பிரிவு நாளை (ஏப்.14) வரை 3 நாட்களுக்கு மூடப்பட்டுள்ளது. ஆனால், வட்டாட்சியர் அலுவலகத்திலுள்ள ஆதார், இ-சேவை மையங்கள் மற்றும் தேர்தல் பிரிவு மட்டும் வழக்கம்போல செயல்படும் என்று வருவாய்த் துறையினர் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT