Published : 13 Apr 2021 03:12 AM
Last Updated : 13 Apr 2021 03:12 AM

கிருஷ்ணகிரி அணையில் இருந்து மேலும் 10 நாள் தண்ணீர் திறக்க கோரிக்கை :

கிருஷ்ணகிரி அணையில் இருந்து 2-ம் போக சாகுபடிக்காக, கூடுதலாக 10 நாள் தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரிடம், தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் ராமகவுண்டர் அளித்துள்ள கோரிக்கை மனு:

கிருஷ்ணகிரி அணையில் இருந்து 2-ம் போக சாகுபடிக்காக, இடது மற்றும் வலது புறகால்வாய்கள் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 90 நாட்கள் மட்டுமே தண்ணீர் திறக்கப்படும் என அறிவிக் கபட்டு, நேற்றுடன் நிறைவடைகிறது.

இதனால் அணையில் இருந்து தண்ணீர் நிறுத்த வேண் டிய நிலை ஏற்பட்டுள்ளது. 2-ம் போக நெல் சாகுபடி முழுமையாக முடிய இன்னும் 12 நாள் தண்ணீர் தேவைப்படுகிறது.

அப்போது நெற்கதிர்கள் முழுமை யாக அறுவடை செய்ய முடியும். ஆகவே, மேலும் 10 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விட வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x