Published : 13 Apr 2021 03:14 AM
Last Updated : 13 Apr 2021 03:14 AM
கோவில்பட்டி: கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயில் பங்குனி திருவிழாவில், நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு நடராஜர் சிவப்பு சார்த்தி சப்பரத்தில் எழுந்தருளினார். இரவு 11 மணிக்கு வெள்ளை சார்த்தி எழுந்தருளினார். நேற்று அதிகாலை பச்சை சார்த்தி எழுந்தருள, ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மாலை 4 மணிக்கு பிச்சாடநர் சப்பரத்தில் வீதி உலாவும், சந்திரசேகரர் பரிவேட்டைக்கு குதிரை வாகனத்தில் புறப்படுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
கரோனா பரவல் காரணமாக இன்று (13-ம் தேதி) தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால், காலை, மாலை சுவாமி, அம்பாள் புறப்பாடு நடைபெறுகிறது. நாளை (14-ம் தேதி) கோயில் வளாகத்தில் தீர்த்தவாரி நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் உதவி ஆணையர் த.சு.ரோஜாலி சுமதா, செயல் அலுவலர் (பொறுப்பு) த.சிவகலைப்பிரியா மற்றும் பணியாளர்கள், மண்டகப்படிதாரர்கள் செய்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT