Published : 12 Apr 2021 03:18 AM
Last Updated : 12 Apr 2021 03:18 AM
கரோனா வைரஸ் பாதிப்பு கடந்த ஆண்டில் அதிகமாக இருந்தபோது, சிகிச்சை அளிப்பதற்காக இந்திய ரயில்வே சார்பில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பழைய ரயில்பெட்டிகள் 45 ஆயிரம் படுக்கைகளாக மாற்றப்பட்டு பல மாநிலங்களில் பயன்படுத்தப்பட்டன
தெற்கு ரயில்வேயில் மட்டும்500 பழைய பெட்டிகள் கரோனாவார்டுகளாக மாற்றப்பட்டு, பயன்படுத்தும் நிலையில் இருக்கிறது. தமிழக சுகாதாரத் துறைக்கு தேவைப்பட்டால் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வேஅதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘கடந்த சில மாதங்களாக குறைந்துவந்த கரோனா பாதிப்பு தற்போதுமீண்டும் அதிகரிக்கத் தொடங்கிஉள்ளது.
கரோனா பாதிக்கப்பட்டோர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை அளிக்க வசதியாக தெற்கு ரயில்வேயில் 500 ரயில் பெட்டிகள் தயாராக இருக்கின்றன. மாநில அரசு விரும்பினால், இந்த பெட்டிகளைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இத்தகவலை தமிழக அரசுக்கு தெரிவித்துள்ளோம்’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT