Published : 12 Apr 2021 03:18 AM
Last Updated : 12 Apr 2021 03:18 AM
அகில இந்திய மீனவர் சங்க தேசிய செய்தித் தொடர்பாளர் நாஞ்சில் பி.ரவி வெளியிட்ட அறிக்கை:
கிழக்கு கடற்கரையில் ஏப்.15 முதல் ஜூன் 14-ம் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடிக்க தடை விதிக்கப்படுகிறது. கடந்த ஆண்டுமீன்பிடி தடை காலம் தொடங்கும் முன்பே கரோனா தொற்று காரணமாக மீனவர்கள் கடலில்மீன்பிடிக்கச் செல்லவில்லை. மீன்பிடி தடை காலத்திலும் செல்லவில்லை. அதன்படி கடந்த ஆண்டு 135 நாட்கள் கடலில் மீன்பிடிக்கச் செல்லவில்லை.
எனவே, மீன்பிடி தடைகாலம் 61 நாட்கள் இல்லை என்று அறிவிக்க வேண்டும். அல்லது 45 நாளாக குறைக்க வேண்டும்.
வரும் காலங்களில் தடைகாலத்தை மழைக்காலமான அக்டோபர் - டிசம்பருக்கு மாற்ற வேண்டும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT