Published : 12 Apr 2021 03:19 AM
Last Updated : 12 Apr 2021 03:19 AM
கரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் வகையில் முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியைப் பின்பற்றுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தடையை மீறுபவர்கள் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து வருகின்றனர். மேலும் அபராதமும் வசூலிக்கப்படுகிறது.
அதன்படி, கடந்த 8-ம் தேதியிலிருந்து நேற்று முன்தினம் வரை 3 நாட்களில் சென்னையில் 1,118 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதுதொடர்பாக ரூ.2 லட்சத்து 12,400 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதேபோல் தனிமனித இடைவெளியைப் பின்பற்றாதவர்கள் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT