Published : 12 Apr 2021 03:19 AM
Last Updated : 12 Apr 2021 03:19 AM

தடுப்பூசி பணிகளை ஒருங்கிணைக்க ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் :

புதுச்சேரியில் கரோனா தடுப்பூசி திருவிழா 100 இடங்களில் நேற்று (ஏப். 11) தொடங்கி வருகின்ற 14-ம் தேதி வரை நடைபெறுகிறது. இப்பணிகளில் சுகாதாரம் மற் றும் வருவாய்த்துறை அலுவலர்கள், வாக்குச்சாவடி அளவிலான அலுவலர்கள், போலீஸ்பீட் ஆபிஸர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், மகளிர் சுயஉதவிக் குழுவினர், தன்னார்வ லர்கள் உள்ளிட்டோர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

வீடு வீடாகச் சென்று 45 வயதுக்கு மேற்பட்டோரை அழைத்து வருவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கரோனா தடுப்பூசி திருவிழா பணிகளை ஒருங்கிணைக்க ஐஏஎஸ் அதிகாரிகளான சுந்தர வடிவேலு, அசோக்குமார், மகேஷ், உதயகுமார், வல்லவன், நெடுஞ்செழியன் ஆகிய 6 பேர் ஒருங்கிணைப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x