Published : 12 Apr 2021 03:19 AM
Last Updated : 12 Apr 2021 03:19 AM

மதுரையில் ஒரே அடகுக் கடையில் - இருவரிடம் ரூ. 5.20 லட்சம் ஏமாற்றிய இளைஞர் :

மதுரை

மதுரை உசிலம்பட்டியைச் சேர்ந்தவர் சக்திவேல் பாண்டியன் இவர் மதுரை வடக்குவெளி வீதியில் செயல்படும் நகை அடகுக் கடையில் பணிபுரிகிறார்.

இவரை திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பைச் சேர்ந்த மதன்ராஜ் (35) என்பவர் சமீபத்தில் அணுகி நகைகளை அடகு வைத்தார்.

இந்நிலையில், மீண்டும் கடந்த மாதம் 10-ம் தேதி சக்திவேல் பாண்டியனை சந்தித்த அவர், தனது நகைகளின் மீது கூடுதலாக ரூ. 2.50 லட்சம் பெற்றார். இத்தொகையை அவர் செலுத்தாமல் ஏமாற்றிவிட்டதாக திலகர்திடல் காவல் நிலையத்தில் சக்திவேல் பாண்டியன் புகார் செய்தார். அதன்பேரில் மதன்ராஜ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதே நபர், அதே அடகுக்கடை மேலாளர் பாபுவிடமும் ஆசை வார்த்தை கூறி ரூ. 2.70 லட்சத்தை நகை மீது வாங்கி ஏமாற்றியதாகத் தெரியவந்தது. இது தொடர்பாக பாபு அளித்த புகாரின்பேரில் போலீஸார் மதன்ராஜை தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x