Published : 12 Apr 2021 03:19 AM
Last Updated : 12 Apr 2021 03:19 AM

மதுரையில் நகை அடகுக் கடையில் - இருவரிடம் ரூ.5.20 லட்சம் ஏமாற்றிய இளைஞர் :

மதுரை

ஒரே அடகுக்கடையில் இருவரிடம் ஏமாற்றி ரூ. 5.20 லட்சம் முறைகேடு செய்த இளைஞரை போலீஸார் தேடி வருகின்றனர்.

மதுரை மாவட்டம், உசிலம் பட்டியைச் சேர்ந்தவர் சக்திவேல் பாண்டியன் இவர் மதுரை வடக்குவெளி வீதியில் செயல்படும் நகை அடகுக் கடையில் பணிபுரிகிறார்.

இவரை திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பைச் சேர்ந்த மதன்ராஜ் (35) என்பவர் சமீபத்தில் அணுகி உள்ளார். அவர் அடகுக் கடையில் தனது நகைகளை அடகு வைத்தார். இந்நிலையில், மீண்டும் கடந்த மாதம் 10-ம் தேதி சக்திவேல் பாண்டியனை சந்தித்த அவர், தனது நகைகளின் மீது கூடுதலாக ரூ.2.50 லட்சம் பெற்றார். இத்தொகையை அவர் செலுத்தாமல் ஏமாற்றிவிட்டதாக திலகர்திடல் காவல் நிலையத்தில் சக்திவேல் பாண்டியன் புகார் செய்தார். அதன்பேரில் மதன் ராஜ் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

மற்றொருவரிடமும் மோசடி

அதே நபர், அதே அடகுக்கடை யில் மேலாளராகப் பணிபுரியும் பாபு என்பவரிடமும் ஆசை வார்த்தை கூறி கூடுதலாக ரூ. 2.70 லட்சத்தை நகையின்பேரில் வாங்கி ஏமாற்றியதாகத் தெரிய வந்தது. இது தொடர்பாக பாபு அளித்த புகாரின்பேரில் மதன்ராஜை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x