Published : 12 Apr 2021 03:20 AM
Last Updated : 12 Apr 2021 03:20 AM
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த அகஸ்தியன்பள்ளி, கோடி யக்காடு, கடினல்வயல் ஆகிய பகுதிகளில் 9 ஆயிரம் ஏக்கரில் உப்பு உற்பத்தி நடைபெற்று வருகிறது. நிகழாண்டு மழைக் காலம் முடிந்தவுடன், கடந்த பிப்ர வரி முதலே உப்பளத்துக்கான பாத்திகள் அமைக்கப்பட்டு, உற் பத்தி தொடங்கி நடைபெற்று வருகிறது.
கடந்த 15 நாட்களாக இப்பகுதி யில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால், தற்போது உப்பு உற்பத்தி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இங்கு உற்பத்தியாகும் உப்பு வெளிமாநிலங்களுக்கும், வெளிமாவட்டங்களுக்கும் லாரி கள் மூலம் அனுப்பப்பட்டு வரு கிறது. தற்போது, ஒரு டன் உப்பு ரூ.800-க்கு விற்பனை செய்யப் படுகிறது.
இந்நிலையில், அதிகளவு உற் பத்தி நடைபெறுவதால் உப்பு வாரும் தொழிலாளர்களுக்கு தினந்தோறும் வேலை கிடைத்து வருகி றது. எனவே, இந்தத் தொழிலை நம்பியுள்ள 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்ப தால், தினந்தோறும் அதிகாலை 5 மணி முதல் காலை 10 மணி வரை உப்பு வாரும் தொழிலில் இவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT