Published : 12 Apr 2021 03:20 AM
Last Updated : 12 Apr 2021 03:20 AM
ஆயங்குடிபள்ளம் பாசன வாய்க் காலை தூர் வாரி, ஆழப்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடத்தை அடுத்த சரஸ்வதி வளாகம் கிராமத்தில், பிரதான வாய்க்காலில் இருந்து கிளை வாய்க்காலாக ஆயங்குடிபள்ளம் பாசன வாய்க்கால் பிரிந்து செல்கிறது. இந்த வாய்க்கால் மூலம் சாமியம், கண்ணாங்குளம், கீழவல்லம் மற்றும் ஆயங்குடி பள்ளம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 3 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதியைப் பெற்று வருகின்றன.
இந்த பாசன வாய்க்கால் கடந்த ஓராண்டுக்கு முன்பு தூர் வாரப்பட்டது. அப்போது முறையாக தூர் வாரப்படாததால், தற் போது வாய்க்காலில் செடிகளும், புதர்களும் மண்டிக் கிடக்கின் றன. இதுபோன்ற பாசன கிளை வாய்க்கால்களை கோடைக் காலத்தில்தான் ஆழமாகவும், அகலமாகவும், ஆக்கிரமிப்புகளை அகற் றியும் எளிதில் தூர் வார முடியும். எனவே, ஆயங்குடிபள்ளம் பாசன வாய்க்காலை இந்த கோடைக் காலத்திலேயே தூர் வாரி, ஆழப்படுத்த வேண்டும் என அப்பகுதி விவசாயிகள், பொதுப் பணித் துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT