Published : 11 Apr 2021 03:15 AM
Last Updated : 11 Apr 2021 03:15 AM
திருப்பூர்: திருப்பூரில் சொகுசு கார் அதிவேகமாக சென்று விபத்து ஏற்படுத்தியதில் கூலித் தொழிலாளி உயிரிழந்தார். காரை ஓட்டி வந்த கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார்.
திருப்பூரை அடுத்த திருமுருகன்பூண்டி பகுதியில் நேற்று முன்தினம் இரவு சொகுசு கார் வேகமாக வந்துள்ளது. அப்போது, அந்த வழியில் நின்று கொண்டிருந்த இருசக்கர வாகனங்கள் மற்றும் சாலையில் நின்று கொண்டிருந்தோர் மீது மோதியுள்ளது. இதில், படுகாயமடைந்த அம்மாபாளையம் கோபால்டூமில் பகுதியைச் சேர்ந்த தையல் தொழிலாளி ஈஸ்வரமூர்த்தி (40), அவிநாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த சம்பவத்தில் 5-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இவர்களை அங்கிருந்தவர்கள் மீட்டு அவிநாசி மற்றும் திருப்பூர் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைத்தனர். 5-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள், விளம்பரப் பலகைகள் சேதமடைந்துள்ளன.
இதுதொடர்பாக திருமுருகன்பூண்டி போலீஸார் வழக்குப் பதிந்து, காரை ஓட்டி வந்த கல்லூரி மாணவர் திருப்பூர் கொங்கு பிரதான சாலையை சேர்ந்த நூல் வியாபாரி கூத்தபெருமாள் மகன் கிஷோர் சங்கர் (24) என்பவரை கைது செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT