Published : 11 Apr 2021 03:16 AM
Last Updated : 11 Apr 2021 03:16 AM

புதுச்சேரி மக்கள் நீதிமன்றத்தில் - 1,259 வழக்குகளுக்கு தீர்வு :

புதுச்சேரியில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,259 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

புதுச்சேரியில் தேசிய மக்கள் நீதிமன்றம் நேற்று நடைபெற்றது. புதுச்சேரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் 9 அமர் வுகளும், காரைக்கால், மாஹேவில் தலா 1 அமர்வு என மொத்தம் 11 அமர்வுகள் செயல்பட்டன. இதில் நீதிபதிகள், அரசு வழக்கறிஞர்கள், வழக்கறிஞர்கள், அரசுத்துறை அதிகாரிகள், காப்பீட்டு நிறுவன அதிகாரிகள், வங்கி அதிகாரிகள் மற்றும் வழக்காளிகள் பங்கேற் றனர்.

சமாதானமாகக் கூடிய கிரிமினல் வழக்குகள், காசோலை வழக்குகள், வாகன விபத்து நஷ்டஈடு வழக்குகள், குடும்ப நீதிமன்ற வழக்குகள், சிவில் வழக்குகள், தொழிலாளர் சம்பந்தப்பட்ட வழக்குகள் என 2,607 நிலுவை மற்றும் நேரடி வழக்குகள் இந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டன.

இதில் 1,259 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டன. இதில் ரூ.3 கோடியே 22 லட்சத்து 24 ஆயிரத்து 289-க்கு தீர்வு காணப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x