Published : 11 Apr 2021 03:16 AM
Last Updated : 11 Apr 2021 03:16 AM

கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் - ஒரே நாளில் 213 பேருக்கு கரோனா தொற்று :

கடலூர்,விழுப்புரம்,கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் நேற்று ஒரே நாளில் 213 பேருக்கு நேற்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 26,335 பேருக்கு கரோனா தொற்று இருந்த நிலையில் நேற்று 127 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டது. மாவட்டத்தில் 26,462 பேருக்கு கரோன தொற்று ஏற்பட்டுள்ளது. நேற்று வரை 25,504 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.கடலூர் மாவட்ட மருத்துவமனைகளில் 466 பேரும், இதர மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளில் 200 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது வரை 292 பேர் உயிரிழந்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று 65 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இதன் மூலம் 15,889 பேருக்கு தொற்று ஏற்பட்டு, 15,488 பேர் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியுள்ளனர். தற்போது 328 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 113 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதே போல் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நேற்று 21 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x