Published : 11 Apr 2021 03:17 AM
Last Updated : 11 Apr 2021 03:17 AM

தமிழகத்தில் ஏப்ரல் 15-ம் தேதி முதல் - இரண்டு மாத கால மீன்பிடி தடைக் காலம் தொடக்கம் :

தமிழகத்தின் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் இரண்டு மாத கால மீன்பிடித் தடைக்காலம் ஏப்ரல் 15-ம் தேதி தொடங்கி அமலுக்கு வருகிறது.

தமிழகம், புதுச்சேரி, ஆந்திரம் உள்ளிட்ட கிழக்குக் கடற்கரைப் பகுதி களில் ஏப்ரல், மே, ஜுன் மாதங்களை மீன் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்க காலமாக, மத்திய மீன் வளத்துறை அமைச்சகம் கண்டறிந் துள்ளது.

தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்கு படுத்தும் சட்டம் 1983-ன் கீழ், தமி ழகத்தின் கிழக்கு கடற்பகுதியில் மீன் இனப்பெருக்கக் காலத்தை கருத் தில் கொண்டும், மீன்வளத்தைப் பாதுகாத்திடும் பொருட்டும், 2021-ம் ஆண்டு ஏப்ரல் 15 முதல் ஜுன் 14 வரையிலுமான இரண்டு மாத காலம் விசைப்படகுகள் மற்றும் இழுவைப் படகுகளை உபயோகப்படுத்தி கடலுக் குள் மீன்பிடிக்கச் செல்லத் தடை விதித்து தமிழக அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.

அதன்படி கன்னியாகுமரி, திருநெல் வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக் கோட்டை, தஞ்சாவூர், நாகப் பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் ஆகிய 14 கடற்கரை மாவட்டங்களைச் சேர்ந்த விசைப்படகுகள் மற்றும் இழுவைப் படகுகளைப் பயன்படுத்தி, மேற் குறிப்பிட்ட காலக்கட்டங்களில் கடலில் மீன்பிடிக்கச் செல்லக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தடைக்காலத்தில் ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேசுவரம், பாம்பன், மண்டபம், தொண்டி, எஸ்.பி. பட்டினம், கீழக்கரை, ஏர்வாடி, வாலிநோக்கம் ஆகிய கடலோரப் பகுதிகளில் 1,500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளும், தமிழக அளவில் 15,000 விசைப்படகுகளும் கடலுக்குச் செல்லாமல் மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும். இந்த 61 நாட்களையும் மீனவர்கள், தங்கள் படகுகளைச் சீரமைக்கப் பயன்படுத்திக் கொள்வர். மேலும் தடைக்கால நிவாரணத் தொகையாக ராமநாதபுரம் மாவட்டத்தில் 33 ஆயிரம் மீனவர்களுக்கு தலா ரூ. 5,000 வழங்கப்பட உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x