Published : 11 Apr 2021 03:17 AM
Last Updated : 11 Apr 2021 03:17 AM

தக்கலையில் இரு பெண்களிடம் நகை பறிப்பு :

நாகர்கோவில்: மருதூர்குறிச்சி தும்பையன்தோட்டத்தைச் சேர்ந்தவர் ஜெகன். இவரது மனைவி சவுமியா. இவர் தக்கலையில் வேலைபார்க்கும் நிறுவனத்தில் இருந்து பணிமுடிந்து மாலையில் மொபட்டில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். முளகுமூடு பகுதியில் மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த நபர்கள், சவுமியாவை தாக்கி அவர் அணிந்திருந்த 10 பவுன் நகையை பறித்துச்சென்றுவிட்டனர்.

இதைப்போல தக்கலை தென்கரையைச் சேர்ந்த பிந்துகுமாரின் மனைவி சுகிதா(36) மொபட்டில் கொல்லவிளை அருகே சென்றுகொண்டிருந்தார். அப்போது ஹெல்மெட் அணிந்து வந்த நபர்கள் சுகிதாவை தாக்கி அவர் அணிந்திருந்த 7 பவுன் தங்க நகையை பறித்துச்சென்றுவிட்டனர். தக்கலை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x