Published : 11 Apr 2021 03:18 AM
Last Updated : 11 Apr 2021 03:18 AM

ஆரணியில் விசிக ஆர்ப்பாட்டம் :

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அருகே நடைபெற்ற இரட்டை கொலையை கண்டித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தி.மலை மாவட்டம் ஆரணியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலாளர் பாஸ்கரன் தலைமை வகித்தார்.

அரக்கோணம் அடுத்த சோகனூர் கிராமத்தில் வசித்த அர்ஜுனன் மற்றும் சூர்யா படுகொலைக்கு நீதி வேண்டும். கொலையாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். கொலை செய்யப்பட்ட இரண்டு பேரின் குடும்பத்தில் உள்ள தலா ஒருவருக்கு அரசு வேலை மற்றும் இழப்பீடு வழங்க வேண்டும்” என வலியுறுத்தி முழக்கமிடப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர் சார்லஸ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த ஏராளமானோர் கலந்துகொண்டனர். இதேபோல், திருவண்ணாமலை மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் விசிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x