Published : 10 Apr 2021 03:12 AM
Last Updated : 10 Apr 2021 03:12 AM
பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி நேற்று எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
வெளிநாடுகளுக்கு தடுப்பூசி ஏற்றுமதி செய்வதை உடனடியாக மத்திய அரசு நிறுத்த வேண்டும். நாட்டில் யார் யாருக்கெல்லாம் தடுப்பூசி தேவைப்படுகிறதோ அனைவருக்கும் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். வேறு தடுப்பூசிகளை மக்களுக்கு வழங்குவது குறித்தும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்தியாவில் கரோனா வைரஸ் 2-வது அலை பரவ தொடங்கி இருக்கிறது. இந்தச் சூழ்நிலையில், உள்நாட்டு தேவையை பூர்த்தி செய்யாமல், வெளிநாடுகளுக்கு கப்பலில் ஏற்றுமதி செய்வது ஏன்? அதற்கு என்ன காரணம் என்று தெளிவாக சொல்லவில்லை. இவ்வாறு ராகுல் காந்தி கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT