Published : 10 Apr 2021 03:13 AM
Last Updated : 10 Apr 2021 03:13 AM

சமூக இடைவெளியை பின்பற்றாத பேக்கரி, கடைக்கு அபராதம் :

கோவை

கோவையில் சமூக இடைவெளியை பின்பற்றாத பேக்கரி, கடைக்கு தலா ரூ.5 ஆயிரம் மற்றும்முகக்கவசம் அணியாதவர்க ளுக்கு ரூ.200 வீதம் மாநகராட்சி அதிகாரிகள் நேற்று அபராதம் விதித்தனர்.

கோவை மாநகராட்சி சார்பில் கரோனா தொற்று பரவலை தடுக்க பல்வேறு தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக மேட்டுப்பாளையம் சாலை, பூமார்க்கெட் பகுதிகளில் மாநகராட்சி ஆணையர் பெ.குமாரவேல் பாண்டியன் நேற்று மாலைஆய்வு செய்து, பேருந்து பயணிகள், இருசக்கர வாகனங்களில் செல்வோர், நான்கு சக்கர வாகனங்களில் செல்வோர் என முகக்கவசம் அணியாமல் பயணம் செய்த 12 பேருக்கு தலா ரூ.200 அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

தொடர்ந்து ரேஸ்கோர்ஸ் பகுதியில் ஆய்வு செய்த ஆணையர், ஒரு பேக்கரியில் சமூக இடைவெளியை பின்பற்றாமலும், முகக்கவசம் அணியாமலும் செயல்பட்டதால் ரூ.5400 அபராதமும், மற்றொரு கடைக்கு ரூ.5000 அபராதமும், முகக்கவசம் அணியாமல் இருந்த 2 நபர்களுக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்க உத்தரவிட்டார். பிறகு அப்பகுதியில் வாகனங்களில் செல்வோரிடம் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டுமென அறிவுறுத்தினார். ஆய்வின்போது, மண்டல உதவி ஆணையர் சுந்தர்ராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x