Published : 10 Apr 2021 03:13 AM
Last Updated : 10 Apr 2021 03:13 AM

தடுப்பூசி போதிய அளவில் இருப்பு :

கோவையில் கரோனா தடுப்பூசி போதிய அளவு இருப்பில் உள்ளதாக மாவட்ட நிர்வாகத்தினர் தெரிவித்தனர். இதுகுறித்து அவர்கள் கூறும்போது, ‘‘கரோனா தடுப்பூசி கோவை அரசு மருத்துவமனையில் 4,500, இஎஸ்ஐ மருத்துவமனையில் 4 ஆயிரம், பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் 2,370, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் 1,200, சூலூர் அரசு மருத்துவமனையில் 870, அன்னூர் அரசு மருத்துவமனையில் 250 , கோலார்ப்பட்டி அரசு மருத்துவமனையில் 100, கிணத்துக்கடவு அரசு மருத்துவமனையில் 50, சுண்டக்காமுத்தூர் அரசு மருத்துவமனையில் 10 ஆகிய எண்ணிக்கையில் இருப்பு உள்ளது. அது தவிர, மாநகராட்சி நகர்நல மையங்கள், மாவட்டப் பகுதிகளில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் கரோனா தடுப்பூசி இருப்பு வைக்கப்பட்டுள்ளது. மக்களுக்கு தொடர்ந்து செலுத்தப்பட்டு வருகிறது’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x