Published : 10 Apr 2021 03:13 AM
Last Updated : 10 Apr 2021 03:13 AM
திருவொற்றியூரில் உள்ள தியாகராஜ சுவாமி கோயிலில் நடைபெறும் பிரதோஷ வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்பது வழக்கம். கரோனா பரவல் காரணமாக கடந்த ஓரு ஆண்டாக பிரதோஷ வழிபாடு ஆன்லைனில் ஒளிபரப்பப்படுகிறது.
இந்நிலையில், தியாகராஜ சுவாமி கோயிலில், பிரதோஷத்தை முன்னிட்டு நேற்று மாலை 4 மணிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இது https://www.youtube.com/c/ThiagarajaswamyVadivudaiyammanTempleOfficial என்ற யூடியூப் சேனல் மூலம் நேரலையில் ஒளிபரப்பப்பட்டது. அபிஷேகம் முடிந்தவுடன் பக்தர்கள் கோயிலுக்கு சென்று சுவாமியை வழிபட்டனர்.
இதே போல், அனைத்து சிவன் கோயில்களிலும் நேற்று பிரதோஷ வழிபாடு சிறப்பாக நடைபெற்றது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT