Published : 10 Apr 2021 03:13 AM
Last Updated : 10 Apr 2021 03:13 AM
சென்னை கணிதவியல் நிறுவனம் சென்னையை அடுத்த சிறுசேரி சிப்காட் தகவல் தொழில்நுட்ப வளாகத்தில் இயங்கி வருகிறது.
நிகர்நிலை பல்கலைக்கழகமாகச் செயல்படும் இந்த உயர்கல்வி நிறுவனத்தில் கணிதம், இயற்பியல், கணினி அறிவியல் தொடர்பான பிஎஸ்சி ஆனர்ஸ் படிப்புகளும், எம்எஸ்சி மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகளும் நடத்தப்படுகின்றன.
இந்நிறுவனத்தின் தற்போதைய இயக்குநர் ராஜீவா கரன்டிகர் விரைவில் ஓய்வுபெற உள்ள நிலையில், மாதவன் முகுந்த் மே 1-ம் தேதி புதிய இயக்குநராக பொறுப்பேற்க உள்ளார்.
தற்போது அவர் சென்னை கணிதவியல் நிறுவனத்தில் இயங்கிவரும் சர்வதேச கணினி அறிவியல் ஆய்வகத்தின் இயக்குநராகப் பணியாற்றி வருகிறார்.
மேலும், கணினி விஞ்ஞானி மணீந்திர அகர்வால், கணிதவியல் நிபுணர்கள் குமார் மூர்த்தி, வி.சீனிவாஸ் ஆகிய மூவரும் சென்னை கணிதவியல் நிறுவனத்தின் ஆட்சிக்குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இத்தகவலை சென்னை கணிதவியல் நிறுவனத்தின் பதிவாளர் எஸ்.பதி தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT