Published : 10 Apr 2021 03:14 AM
Last Updated : 10 Apr 2021 03:14 AM
பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்கள் உண் டியலில் பணம், வெள்ளி, தங்கம் ஆகியவற்றை காணிக்கையாகச் செலுத்துகின்றனர். இவற்றை கணக்கிடும் பணி நேற்று மலைக் கோயிலில் உள்ள மண்டபத்தில் நடைபெற்றது. கடந்த பிப்.10 முதல் 56 நாட்கள் உண்டி யலில் செலுத் தப்பட்ட காணிக்கை கோயில் இணை ஆணையர் கிராந்திகுமார்பாடி, கோயில் அறங்காவலர் குழுவினர் முன் னிலையில் கணக்கிடப்பட்டது.
இதில் ரொக்கமாக 2 கோடியே 82 லட்சத்து 87 ஆயிரத்து 560 ரூபாயும், ஆயிரத்து 172 கிராம் தங்கம், 23 ஆயிரத்து 645 கிராம் வெள்ளி மற்றும் வெளிநாட்டு கரன்சிகள் 148 வரப்பெற்றன.
உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் வங்கி அலுவ லர்கள், கோயில் அலுவலர்கள், கல்லூரி மாணவிகள் ஈடுபட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT