Published : 09 Apr 2021 03:12 AM
Last Updated : 09 Apr 2021 03:12 AM

உயர் நீதிமன்றத்தில் உதவி சொலிசிட்டர் ஜெனரல் நியமனம் :

சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசுக்கான புதிய உதவிசொலிசிட்டர் ஜெனரலாக வழக்கறிஞர் ஆர்.ராஜேஷ் விவேகானந்தனை குடியரசுத் தலைவர் நியமித்துள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் வழக்குகளில் ஆஜராகி வாதிடுவதற்காக கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் மற்றும் உதவி சொலிசிட்டர் ஜெனரல் தவிர்த்து, மத்திய அரசு பேனல் வழக்கறிஞர்கள் துறை வாரியாக நியமிக்கப்படுவது வழக்கம்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் உதவி சொலிசிட்டர் ஜெனரலாக பதவி வகித்த கார்த்திகேயனின் பதவிக்காலம் முடிவுக்கு வந்ததை அடுத்து, புதிய உதவி சொலிசிட்டர் ஜெனரலாக வழக்கறிஞர் ஆர்.ராஜேஷ் விவேகானந்தனை குடியரசுத் தலைவர் நியமித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x