Published : 09 Apr 2021 03:12 AM
Last Updated : 09 Apr 2021 03:12 AM

கரோனா 2-வது அலையை தடுக்க முடியும் : பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை

கரோனா வைரஸ் முதல் அலையை தடுத்தது போன்று, 2-வது அலையையும் நம்மால் தடுக்க முடியும் என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கரோனா வைரஸ் பரவலை தடுப்பது தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களு டன் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக நேற்று மாலை முக்கிய ஆலோ சனை நடத்தினார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன், பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர்.

கூட்டத்துக்குப் பிறகு நாட்டு மக்களி டையே பிரதமர் மோடி உரையாற்றினார். அவர் கூறியதாவது:

கரோனா தொற்று அதிகம் உள்ள கட்டுப்பாட்டு பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அடுத்த 3 வாரங்கள் மிக முக்கியமானது. இந்த காலத்தில் கரோனா தடுப்பு நடைமுறைகளை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும்.

மகாராஷ்டிரா, குஜராத், சத்தீஸ்கர், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் முதல் அலையைவிட தற்போது வைரஸ் பரவல் அதிகமாக உள்ளது. இது கவலை அளிக்கிறது.

எனினும் கரோனா முதல் அலையின் போது இருந்ததைவிட இப்போது போதிய உள்கட்டமைப்பு வசதியுடன் தயார் நிலையில் உள்ளோம். முதல் அலையின்போது மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்தனர். தற்போது 2-வது அலை குறித்து மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை என்றே கருதுகிறேன்.பெரும்பாலான மாநில அரசுகளின் செயல்பாடும் போதுமானதாக இல்லை.

கரோனா வைரஸ் பரவல் அதிகரிப்பது குறித்து அச்சப்பட வேண்டாம். மாநில அரசு கள் பரிசோதனைகளை தொடர்ந்து அதிகரித் துக் கொண்டே செல்ல வேண்டும். குறிப்பாக 70 சதவீதம் அளவுக்கு ஆர்டி பிசிஆர் பரி சோதனைகளை மேற்கொள்ள வேண்டும்.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர் களுடன் தொடர்பில் இருந்தவர்களை தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். அதாவது 72 மணி நேரத்துக்குள் குறைந்தபட்சம் 30 பேரை கண்டுபிடித்து பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். முதல் கரோனா வைரஸ் அலையை தடுத்தது போன்று, சிறந்த நிர்வாகத்தின் மூலம் 2-வது அலையையும் நம்மால் தடுக்க முடியும்.

இரவு நேர ஊரடங்கு

கரோனா தடுப்பூசி குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். ஏப்ரல் 11 முதல் 14-ம் தேதி வரை கரோனா தடுப்பூசி விழிப்புணர்வு நாட்களாக கடைபிடித்து, அதிகம் பேருக்கு தடுப்பூசி போட வேண்டும். அனைத்து மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும். இரவு 9 மணிக்கு தொடங்கி அதிகாலை வரை ஊரடங்கை அமல் செய்ய வேண்டும்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x