Published : 09 Apr 2021 03:12 AM
Last Updated : 09 Apr 2021 03:12 AM
கரோனா தொற்று ஏற்படு வதைத் தடுக்க 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்படுகிறது. பிரதமர் மோடி மார்ச் 1-ம் தேதி கோவாக்ஸின் தடுப்பூசி செலுத்திக் கொண்டார். நேற்று காலை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தடுப்பூசியின் 2-வது டோஸ் செலுத்திக் கொண்டார்.
இதுதொடர்பாக மோடி தனது ட்விட்டர் பதிவில், எனது இரண்டாவது டோஸ் தடுப்பூசியை எய்ம்ஸ் மருத்துவமனையில் செலுத்திக் கொண்டேன். கரோனா வைரஸை தோற்கடிப்பதற்கான சில வழிகளில் தடுப்பூசியும் ஒன்று. தகுதி பெற்ற அனை வரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள்' என பதிவிட்டுள்ளார்.
கடந்த மார்ச் மாதம் பிரதமருக்கு முதல் டோஸ் தடுப்பூசியை புதுச்சேரியைச் சேர்ந்த நிவேதா என்ற செவிலியர் செலுத்தினார். நேற்று பஞ்சாப் மாநிலம் சங்ரூர் பகுதியைச் சேர்ந்த செவிலியர் நிஷா சர்மா என்பவர் பிரதமர் மோடிக்கு தடுப்பூசி செலுத்தினார்.
இதுகுறித்து செவிலியர் நிஷா சர்மா கூறுகையில், ‘‘பிரதமரை சந்தித்ததும் அவருக்கு தடுப்பூசி செலுத்தியதும் மறக்க முடியாத தருணம்’’ என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். செவிலியர் நிவேதா கூறுகையில், ‘‘இரண்டாவது முறையாக பிரதமரை சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அவருக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசி போடும் பணியிலும் ஈடுபட்டது குறித்து மகிழ்ச்சி அடைந்தேன். அவர் எங்களுடன் பேசினார். பிரதமருடன் நாங்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டோம்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT