Published : 09 Apr 2021 03:12 AM
Last Updated : 09 Apr 2021 03:12 AM

ஏப்.15 முதல் மீன்பிடி தடை காலம் : மீனவர்கள் கரை திரும்ப உத்தரவு :

சென்னை

தமிழகத்தில் ஏப்.15-ம் தேதி முதல் ஜூன் 14 வரை மீன்பிடி தடை காலம் அமல்படுத்தப்பட உள்ளது. எனவே 14-ம் தேதிக்குள் மீனவர்கள் கரைக்குத் திரும்ப வேண்டும் என்று மீன்வளத் துறை உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக விசைப்படகு உரிமையாளர்கள் சங்கத் தலைவர்களுக்கு மீன்துறை உதவி இயக்குநர் வேலன் அனுப்பியுள்ள கடிதம்:

தமிழகத்தின் கிழக்கு, மேற்கு கடல் பகுதியில்ஆண்டுதோறும் மீன் இனப்பெருக்க காலமான ஏப்.15 முதல் ஜூன் 14 வரை 61 நாட்களுக்கு கிழக்கு கடற்கரை பகுதிகளான திருவள்ளூர் மாவட்டம் முதல் கன்னியாகுமரி வரை மீன்பிடி விசைப்படகுகள், இழுவைப் படகுகள் மூலமாக கடலில் மீன்பிடிப்பதற்கு தடை விதித்து அரசால் ஆணை வழங்கப்பட்டுள்ளது.

பாரம்பரிய மீன்பிடி படகுகளுக்கு மீன்பிடி தடையில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனவே, மேற்கண்ட 61 நாட்கள் கடலுக்கு சென்று மீன்பிடிக்க வேண்டாம். கடலுக்கு சென்றுள்ள படகுகள் அனைத்தும் ஏப்.14-ம் தேதி இரவுக்குள் மீன்பிடி துறைமுகத்துக்குள் திரும்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x