Published : 09 Apr 2021 03:12 AM
Last Updated : 09 Apr 2021 03:12 AM

பெண் விடுதலைக் கட்சி தலைவரின் : கார் கண்ணாடி உடைப்பு :

நடந்துமுடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில், பெண் விடுதலைக் கட்சியின் தலைவர் சபரிமாலா, பொள்ளாச்சி தொகுதி திமுக வேட்பாளர் டாக்டர் வரதராஜனுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்தார். ஒக்கிலிபாளையம் கிராமத்தில்பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது அப்பகுதியை சேர்ந்த அதிமுகவின ருக்கும் திமுகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து, தன்னை தாக்க முற்பட்டதாக வடக்கி பாளையம் காவல் நிலையத்தில் சபரிமாலா புகார் அளித்திருந்தார். போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு பொள்ளாச்சி அடுத்த ஜோதி நகர் பகுதியில் சபரிமாலா தங்கி இருந்த வீட்டின் முன்புறம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த அவரது கார் கண்ணாடிகள் மர்ம நபர்களால் உடைக்கப்பட்டன.

இதுகுறித்து சபரிமாலா பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், டிஎஸ்பி விவேகானந்தன் தலைமையிலான போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x