Published : 09 Apr 2021 03:12 AM
Last Updated : 09 Apr 2021 03:12 AM

வாக்கு எண்ணிக்கை மையத்தில் போலீஸார் தீவிர கண்காணிப்பு :

கோவை தடாகம் சாலையில் உள்ள அரசினர் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மையம் அமைக்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான 6,885 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 5,316 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 5,894 விவிபேட் இயந்திரங்கள் அங்கு பாதுகாப்பாக வைக்கப் பட்டுள்ளன.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பகுதிகள், வாக்கு எண்ணிக்கை மையத்தின் வளாகம், கல்லூரியின் வெளிப்பகுதி, கட்சிகளின் முகவர்கள் காத்திருக்கும் பகுதி உள்ளிட்ட இடங்களில் 310 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். 133 கண் காணிப்பு கேமராக்கள் பொருத் தப்பட்டுள்ளன.

பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள போலீஸார் சுழற்சி முறையில் பணியை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் கூறும்போது, “வாக்கு எண்ணிக்கை மையத் துக்கு போதிய பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. தேவைப் பட்டால் இந்த பாதுகாப்பு அதிகரிக்கப்படும்” என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x