Published : 09 Apr 2021 03:12 AM
Last Updated : 09 Apr 2021 03:12 AM

ஆயுள் சான்று வழங்க நலவாரிய ஓய்வூதியதாரர்களுக்கு 30-ம் தேதி கடைசி நாள் :

உதகை: சமூக பாதுகாப்பு திட்ட தொழிலாளர் உதவி ஆணையர் அலுவலக செய்திக்குறிப்பில், " நீலகிரி மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (சமூகப் பாதுகாப்பு திட்டம்) அலுவலகத்தில் ஓய்வூதியம் பெற்று வரும் கட்டுமான மற்றும் அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு பெற்ற ஓய்வூதியதாரர்கள், வரும் 30-ம் தேதிக்குள் 2021-22ம் ஆண்டுக்கான ஆயுள் சான்று அளிக்க வேண்டும். ஆயுள் சான்று அளிக்க வரும் ஓய்வூதியதாரர்கள், தற்போதைய கைபேசி எண், வங்கிக் கணக்கு புத்தகம் நகல், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல் ஆகிய ஆவணங்களை இணைத்து, உதகை ஸ்டேட் பேங்க் லைன் முகவரியிலுள்ள அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x