Published : 09 Apr 2021 03:12 AM
Last Updated : 09 Apr 2021 03:12 AM
கோவை மாவட்டத்தில் கடந்தாண்டுமுதற்கட்ட கரோனா பாதிப்பின்போது, காவல் நிலையங்களில் பணிபுரியும் காவலர்களுக்கு தொற்று ஏற்பட்டு, காவல் நிலையங்கள் மூடப்பட்ட நிகழ்வுகள் நடைபெற்றன.
தற்போது கரோனா 2-ம் அலைபரவிவரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்களிடம் புகார் பெறுவதற்காக காவல் நிலையங்களுக்கு வெளியே தனி மையம் அமைக்கப்படுகிறது. குறிப்பாக ஆர்.எஸ்.புரம், ரேஸ்கோர்ஸ் காவல் நிலையங்களில் காவல் நிலைய கட்டிடத்தின் வெளியே சாமியானா பந்தல்கள் அமைக்கப்பட்டு நேற்று புகார்கள் பெறப்பட்டன. இதுகுறித்து மாநகர காவல் துறை அதிகாரிகள் கூறும்போது, “கரோனா தொற்றால் காவல்துறையினர் பாதிக்கப்படுவதை தடுக்கவும், பொதுமக்கள் நலன்கருதியும் அனைத்து காவல் நிலையங்களிலும் இதுபோன்ற புகார்பெறும் மையங்கள் அமைக்கப்படுகின்றன” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT