Published : 09 Apr 2021 03:12 AM
Last Updated : 09 Apr 2021 03:12 AM

சொந்த ஊர் சென்ற தொழிலாளர் திரும்பாததால் - தென்னந்தோப்புகளில் பல லட்சம் தேங்காய்கள் தேக்கம் :

தமிழகத்தில் பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதியில் அதிக அளவில்தென்னை சாகுபடி நடைபெறுகிறது. உற்பத்தி செய்யப்படும் தென்னை நார் பொருட்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதால் ஆண்டுக்கு பல கோடிரூபாய் அந்நிய செலாவணி ஈட்டப்பட்டு வருகிறது.

ஆண்டு முழுவதும் வேலைவாய்ப்பு, வேலைக்கேற்ற ஊதியம்என்பதால் தேங்காய், இளநீர்அறுவடை மற்றும் கொப்பரை உற்பத்தி பணிகளில் வெளிமாவட்டம் மற்றும் வடமாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு சொந்த ஊருக்கு தொழிலாளர்கள் சென்றுள்ளனர். அவர்கள் இதுவரை திரும்பி வராததால்தேங்காய் பறிக்க முடியாமலும், பறிக்கப்பட்ட தேங்காய்களை விற்பனைக்கு கொண்டுசெல்ல முடியாமலும் தென்னந்தோப்புகளில் லட்சக்கணக்கான தேங்காய்கள் தேங்கியுள்ளன.

கொப்பரையும் கொள்முதல் இன்றி தேக்கமடைந்துள்ளது. இதனால் தேங்காய் கொள்முதல் விலையும் கடந்த சில நாட்களாக சரிவை கண்டுள்ளதால் தென்னை விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x