Published : 09 Apr 2021 03:12 AM
Last Updated : 09 Apr 2021 03:12 AM

700 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் :

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகேயுள்ள பண்பாக்கம் பகுதியில் விவசாயி ஒருவருக்குச் சொந்தமான கிடங்கில் புகையிலைப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக, கும்மிடிப்பூண்டி காவல் துணைக் கண்காணிப்பாளர் ரமேஷுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, கவரப்பேட்டை போலீஸார் நேற்று அக்கிடங்கில் சோதனை நடத்தி, 20 மூட்டைகளில் இருந்த 700 கிலோ புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். அவற்றின் மதிப்பு ரூ.5 லட்சம். மேலும், புகையிலைப் பொருட்களை பதுக்கி வைத்தது தொடர்பாக, கும்மிடிப்பூண்டி வி.எம்.தெருவில் வசித்து வந்த பிரபத் சிங்கை(23) கைது செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x