Published : 09 Apr 2021 03:12 AM
Last Updated : 09 Apr 2021 03:12 AM
புதுச்சேரியில் கரோனா தொற்று 43 ஆயிரத்தை கடந்த நிலையில், புதிதாக ஒரே நாளில் 293 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2 ஆயிரமாக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை செயலர் அருண் நேற்று வெளியிட்டிருக்கும் தகவல்:
புதுச்சேரி மாநிலத்தில் 3,451 பேருக்கு புதிதாக கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரி - 181, காரைக்கால் – 87,ஏனாம் - 10, மாஹே - 15 என மொத்தம் 293 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இவர்களையும் சேர்த்து, இதுவரை பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 43 ஆயிரத்து 242 ஆக அதிகரித்துள்ளது. இவற்றில் மருத்துவமனைகளில் 490 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 1,510 பேரும் என 2 ஆயிரம் பேர் தற்போது சிகிச்சையில் உள்ளனர். நேற்றைய தினம் உயிரிழப்பு ஏதுமில்லை.
இதுவரையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 687 ஆக உள்ளது. இறப்பு விகிதம் 1.59 ஆக உள்ளது. நேற்று 113 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 40 ஆயிரத்து 555 பேர் குணமடைந்துள்ளனர். அதாவது, 93.79 சதவீதத்தினர் குணமடைந்துள்ளனர்.
இதுவரை, 6 லட்சத்து 89 ஆயிரத்து 359 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில், 6 லட்சத்து 33 ஆயிரத்து 708 பரிசோதனைகள் ‘நெகடிவ்’ என்று முடிவு வந்துள்ளது. சுகாதாரப் பணியாளர்கள் 28 ஆயிரத்து 393 பேர் (62 நாட்கள்), முன்களப் பணியாளர்கள் 16 ஆயிரத்து 302 பேர் (50 நாட்கள்), பொதுமக்கள் 40 ஆயிரத்து 59 பேர் (34 நாட்கள்) என மொத்தம் 84 ஆயிரத்து 754 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இவ்வாறு சுகாதார துறை வெளியிட்டிருக்கும் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT