Published : 09 Apr 2021 03:12 AM
Last Updated : 09 Apr 2021 03:12 AM

நடுக்கடலில் பேனர் வைக்கப் போட்டி : அஜீத், சிம்புவைத் தொடர்ந்து தனுஷுக்கும் வைத்தனர்

புதிய திரைப்படங்கள் வெளியாகும் போது நடுக்கடலில் பேனர் வைக்க ரசிகர்கள் போட்டியிடும் சூழல் புதுச்சேரியில் அதிகரித்துள்ளது. அஜீத், சிம்புவைத் தொடர்ந்து தனுஷின் ரசிகர்களும் தற் போது இந்த முறையைப் பின்பற் றுகின்றனர்.

புதுவை மக்களின் வாழ்வில் ஒன்றிணைந்தது புதுவை கடற்கரை. புதுச்சேரியின் கடற்கரையில் கடந்த 1861-ம் ஆண்டு கடலில் பாலம் அமைக்கும் பணி தொடங்கியது. கடற்கரையில் இருந்து கடல் நோக்கி 192 மீட்டர் நீளத்துக்கு பாலம் அமைந்தது. 5 ஆண்டு பணிகள் நடந்தன. 1866-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி கடல் பாலம் திறக்கப்பட்டது. 1952-ல் வீசிய புயலில் புதுவை துறைமுகம் மற் றும் இந்தக் கடல் பாலம் முற்றிலும் மறைந்து போனது. தற்போது காந்தி சிலைக்குப் பின்னே சிறு கம்பிகள் நீட்டிக் கொண்டு, கடல் பாலத்தின் சாட்சிகளாக உள்ளன.

கடலுக்குள் இருக்கும் இந்த இரும்புக் கம்பிகளில் திரைப்பட பேனர்களை ரசிகர்கள் கட்டி வருகின்றனர். அபாயகரமான முறையில் படகுகளில் சென்று, அங்கு நடிகர்களின் பேனர்களை ரசிகர்கள் கட்டி வருகின்றனர். இது அபாயகரமானது என்று காவல்துறையினர் எச்சரித்தாலும் தொடர்ந்து இதைச் செய்து வருகின்றனர்.

ஏற்கெனவே அஜித், சிம்பு ரசிகர்கள் படகுகளில் சென்று பேனர்களை அங்கே கட்டுவது வழக்கமாக இருந்தது. அடுத்து வரும் நாட்களில் போலீஸார் மீனவர் உதவியு டன் அதை அகற்றுவது வழக் கமாகி வருகிறது.

இந்நிலையில் நடிகர் தனுஷ் நடித்த ’கர்ணன்’ திரைப்படம் நாளை திரை யரங்குகளில் வெளியாகிறது. அதைக் கொண்டாடும் வகையில் புதுச்சேரி தனுஷ் ரசிகர்கள் கடற்கரை சாலை காந்தி சிலை பின்புறம் கடலில் உள்ள இந்த இரும்பு தூண்களில் அவரது படத்தின் பேனரை கட்டியுள்ளனர். படகுகள் மூலம் சென்று, அங்கே கடல் நீரில் இறங்கி, அபாயகரமான முறையில்புதிய படத்தின் பேனரை கட்டி உள்ளதாக தெரிய வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x