Published : 09 Apr 2021 03:12 AM
Last Updated : 09 Apr 2021 03:12 AM
புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல்வாக்குப்பதிவு கடந்த 6-ம் தேதிநடைபெற்றது. அப்போது முதலியார்பேட்டை தொகுதியில் அதிமுகசார்பில் போட்டியிட்ட பாஸ்கர் எம்எல்ஏ ஆதரவாளர்களுக்கும், திமுக சார்பில் போட்டியிட்ட வழக்கறிஞர் சம்பத் ஆதரவாளர்களுக்கும் இடையே தேர்தல் தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. தேர்தலுக்கு முந்தைய நாளில் வாக்கா ளர்களுக்கு பரிசுக் கூப்பன்களை கொடுக்க முயன்றபோது இரு தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டதாகத் தெரிகிறது.
இந்நிலையில் திமுகவுக்கு ஆதரவாக ஆட்டோ பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்த, பாரதி மில் பகுதியைச் சேர்ந்த சந்திரசேகர் (40)முதலியார்பேட்டை வரதராஜப் பெருமாள் கோயில் வீதி வாக் குச்சாவடி அருகே கட்சியினருடன் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அங்கிருந்த அதிமுக மற்றும் திமுக தரப்பினருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியுள்ளது. இதில் ஆட்டோ ஓட்டுநர் சந்திரசேகர் தாக் கப்பட்டார்.
இதுகுறித்து திமுகவினர் முதலியார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். சந்திசேகரின் தாயார் கஸ்தூரியும் புகார் அளித்தார். அதன்பேரில் முதலியார் பேட்டை போலீஸார் அதிமுகவைச் சேர்ந்த பாஸ்கர் எம்எல்ஏ உள் ளிட்ட 9 பேர் மீது கொலை முயற்சிஉள்ளிட்ட பிரிவுகளின் கீழ் நேற்றுமுன்தினம் வழக்குப்பதிவு செய்த னர். இதையறிந்த பாஸ்கர் எம்எல்ஏ மற்றும் அவரது ஆதரவாளர்கள் நேற்று முதலியார்பேட்டை காவல்நிலையம் முன்பு திரண்டு வந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட் டனர். தேர்தல் முன்விரோதத்தில் பாஸ்கர் எம்எல்ஏ மீது போடப் பட்டுள்ள பொய் வழக்கை திரும்பப் பெற வேண்டும் என கோஷ மிட்டனர். இதைத்தொடர்ந்து காவல் நிலையம் முன்பு கடலூர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து அங்கு வந்த எஸ்பி ஜிந்தா கோதண்டராமன் மற்றும் முதலியார்பேட்டை போலீஸார் பாஸ்கர் எம்எல்ஏ மற்றும்நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். போலீஸார் வழக்கைதிரும்பப் பெறுவதாக உறுதியளித் ததால் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் கடலூர் சாலையில் சிலமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT