Published : 09 Apr 2021 03:12 AM
Last Updated : 09 Apr 2021 03:12 AM
ஒத்தக்கடை அருகே வியா பாரியை கொலை செய் தவ ர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
மதுரை ஒத்தக்கடை அருகிலுள்ள அயிலாங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் அம்மாவாசி(45). ஆடு, மாடுகள் வாங்கி விற்கும் தொழில் புரிந்தார். நேற்று முன்தினம் பகலில் வெளியே சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.
இந்நிலையில் நேற்று காலை வீட்டுக்கு அருகே வயல் பகுதியில் கழுத்தறுக் கப்பட்டு இறந்து கிடந்தார். ஒத்தக்கடை போலீஸார், அம்மாவாசியின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தொழில் போட்டி அல்லது முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT