Published : 09 Apr 2021 03:12 AM
Last Updated : 09 Apr 2021 03:12 AM
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகிலுள்ள ஆலம்பட்டியைச் சேர்ந்தவர் கோபி(40). ராணுவ வீரர். தேர்தலில் வாக்களிக்க சொந்த ஊருக்கு வந்திருந்தார். நேற்று முன்தினம் கோபியும், அவரது நண்பர் கணேசனும் திருமங்கலத்துக்கு காரில் சென்றனர். நேற்று அதிகாலை இருவரும் ஆலம்பட்டிக்கு திரும்பி வந்து கொண்டிருந்தனர். காரை கோபி ஓட்டினார். திருமங்கலம் தெற்குத் தெரு அருகே சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், ரோட்டின் மைய சுவரில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் கோபியும், கணேசனும் படுகாயமடைந்தனர். திருமங்கலம் டி.எஸ்.பி வினோதினி தலைமையிலான போலீஸார் இருவரையும் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT