Published : 09 Apr 2021 03:12 AM
Last Updated : 09 Apr 2021 03:12 AM

சிறப்பு எழுத்தறிவு திட்ட தேர்வு 99.93 சதவீதம் பேர் தேர்ச்சி :

சென்னை

சிறப்பு எழுத்தறிவுத் திட்டத் தேர்வில் 99.93 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் விருதுநகர், ராமநா தபுரம் ஆகிய மாவட்டங்களில் 15 வயதுக்கு மேல் எழுத, படிக்கத் தெரியாதோருக்கு கல்வி கற்றுத்தரும் நோக்கத்தில் சிறப்பு பள்ளிசாரா மற்றும் வயது வந்தோர் கல்வித் திட்டம் 2019-20 கல்வியாண்டில் தொடங்கப் பட்டது.

இந்தத் திட்டத்தின் கீழ் இரு மாவட்டங்களிலும் ஓய்வுபெற்ற ஆசிரியர்கள், தன்னார்வலர் களைக் கொண்டு அடிப்படை எழுத்தறிவுப் பயிற்சிகள் வழங் கப்பட்டன. இதற்கான முதல்கட்ட அடைவுத் தேர்வு பிப்.28-ல் நடந்ததில் ராமநாதபுரம், விருது நகர் மாவட்டங்களில் மொத்தம் 40,288 பேர் எழுதினர்.

இந்நிலையில் பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குநரகம் வெளியிட்ட தேர்வு முடிவில் ராமநாதபுரம் மாவட்டத்தில் 99.90 %, விருதுநகர் மாவட்டத்தில் 99.97% தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் 26,898 பேர் ஏ கிரேடும் (60 மதிப்பெண்ணுக்கு மேல்), 13,368 பேர் பி கிரேடும்(40 %க்கு மேல்), 22 பேர் சி கிரேடும் (40 %-க்கும் கீழ்) பெற்றுள்ளனர் என்று கல்வித்துறை தெரிவித் துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x