Published : 09 Apr 2021 03:12 AM
Last Updated : 09 Apr 2021 03:12 AM
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தொடர்ந்த வழக்கில் சிபிஐயை எதிர்மனுதாரராக சேர்த்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 2018-ல் அரசு மருத்துவமனை முன் போராட்டம் நடத்தியது தொடர்பாக தன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்யக்கோரி கமல்ஹாசன், உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த மனுவை நீதிபதி இளங்கோ விசாரித்தார். அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், ஸ்டெர்லைட் போராட்ட வழக்கை சிபிஐ விசாரித்து வருவதால், சிபிஐயை எதிர்மனுதாரராக சேர்க்க வேண்டும் என்றார். இதையடுத்து கமல்ஹாசன் தொடர்ந்த வழக்கில் சிபிஐயை எதிர்மனுதாரராக சேர்த்து, சிபிஐ பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT