Published : 09 Apr 2021 03:12 AM
Last Updated : 09 Apr 2021 03:12 AM
ரயில்களில் பயணிகள் தங்களது வசதிக்காக முன்பதிவு செய்து பயணிக்கின்றனர். உறுதி செய்யப்பட்ட முன்பதிவு, ஆர்ஏசி, காத்திருப்போர் பட்டியல் (பயணம் செய்தல் கூடாது) என்ற மூன்று விதமான நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன.
இந்நிலையில் முன்பதிவு செய்யாத பயணிகள் ரயில்களை இயக்குவது நிறுத்தப்பட்டுள்ளது. எக்ஸ்பிரஸ் ரயில்களில் பொதுப் பெட்டிகள் இணைப்பு இல்லாததால் முன்பதிவு பெட்டிகளில் காத்திருப்போர் பட்டியலில் இடம் பெற்றவர்கள் பயணிக்கின்றனர். இது முன்பதிவு பயணிகளுக்கு இடையூறு ஏற்படுவதாகப் புகார்கள் எழுகின்றன. மேலும் திட்டமிட்டு பயணம் செய்வோருக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT