Published : 09 Apr 2021 03:13 AM
Last Updated : 09 Apr 2021 03:13 AM
தேனி எம்பி ரவீந்திரநாத்தின் கார் கண்ணாடியைச் சேதப்படுத்திய வழக்கில் அமமுகவைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டார்.
தேனி மாவட்டம் போடி தொகுதி பெருமாள்கவுண்டன்பட்டியில் கடந்த 6-ம் தேதி வாக்குப் பதிவின்போது தேனி எம்பி ப.ரவீந்திரநாத் இங்குள்ள வாக்குச்சாவடியை ஆய்வு செய்தார். அப்போது சிலர் எம்பி கார் மீது தாக்குதல் நடத்தினர். இதில் கார் கண்ணாடிகள் சேதமாகின. இது தொடர்பான புகாரின் பேரில் பெரியபாண்டி, ராஜாங்கம், ஜெயேந்திரன், மணிகண்டன், விஜயன், கார்த்திக் உள்ளிட்ட 17 பேர் மீது வழக்குப்பதிவு செய்து அமமுகவைச் சேர்ந்த மாயி(44) என்பவரை போடி தாலுகா போலீஸார் நேற்று கைது செய்தனர். இதைக் கண்டித்து அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மாயியை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தினர். போலீஸாரின் சமரசப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு அனைவரும் கலைந்து சென்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT