Published : 09 Apr 2021 03:13 AM
Last Updated : 09 Apr 2021 03:13 AM
தமிழக-கேரள எல்லையான குமுளி அருகே உள்ள வனப் பகுதி பெரியாறு புலிகள் சரணாலயமாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. இங்கிருந்து 1 கி.மீ. தூரத்தில் 62-வது மைல் எனும் இடத்தில் உள்ள எஸ்டேட் கிணற்றில் நேற்று அதிகாலை சிறுத்தை ஒன்று தவறி விழுந்தது. தொழிலாளர்கள் தகவல் தெரிவித்ததையடுத்து தேக்கடி வனத் துறையினர், சிறுத்தையை மீட்டு பெரியாறு புலி கள் சரணாலய வனப் பகுதிக்கு கொண்டு சென்று விடுவித்தனர்.
வனத் துறையினர் கூறுகையில், வனப்பகுதியில் இருந்து வந்த 3 வயது சிறுத்தை தண்ணீர் குடிக்க முயன்றபோது கிணற்றில் தவறி விழுந்துள்ளது என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT