Published : 09 Apr 2021 03:13 AM
Last Updated : 09 Apr 2021 03:13 AM

போலீஸ் ஜீப் மோதி இளைஞர் உயிரிழப்பு :

திருச்சி கிராப்பட்டி காலனி பிரதான சாலையைச் சேர்ந்தவர் மோகன் மகன் வினோத்(18). இவர் தனது மோட்டார் சைக்கிளில் ரயில்வே காவல் நிலைய வாசலில் வந்து கொண்டிருந்தபோது, அவ்வழியாக வேகமாக வந்த காவல்துறை ஜீப் ஒன்று இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது.

இதில், தலையில் பலத்த காயமடைந்த வினோத், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், செல் லும் வழியிலேயே வினோத் உயி ரிழந்தார்.

இதுதொடர்பாக காவல்துறை ஜீப் ஓட்டுநரான, நவலூர் குட்டப்பட்டு பகுதியைச் சேர்ந்த ரயில்வே காவலர் செல்வ பிரபாகரனை (34) திருச்சி தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x