Published : 09 Apr 2021 03:13 AM
Last Updated : 09 Apr 2021 03:13 AM

திருச்சி மாவட்ட ஓய்வூதியர்கள் சங்கக் கூட்டம் :

திருச்சி

திருச்சி மாவட்ட ஓய்வூதியர்கள் சங்கத்தின் மாதாந்திர கூட்டம் திருச்சியில் அண்மையில் நடைபெற்றது. சங்கத் தலைவர் வி.என்.வெங்கடாசலம் தலைமை வகித்தார். செயலாளர் ஆர்.முத்தையன், பொருளாளர் கே.ராஜகோபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில், பெற்றோர் இல்லாத, திருமணம் செய்து கொள்ளாத ஓய்வூதியர்கள் மறைவுக்கு பின்னர், அவரது பராமரிப்பில் இருந்து கணவனை இழந்த அல்லது விவாகரத்தான சகோதரிக்கு வாழ்நாள் குடும்ப ஓய்வூதியம் பெற வகை செய்து அரசு உத்தரவிட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x