Published : 09 Apr 2021 03:13 AM
Last Updated : 09 Apr 2021 03:13 AM
தஞ்சாவூர்: திருச்சி மண்டல ரயில்வே பாதுகாப்பு படை முதன்மை ஆணையர் ராமகிருஷ்ணன், உதவி ஆணையர் சின்னதுரை ஆகியோர் உத்தரவின்பேரில், தஞ்சாவூர் ரயில்வே பாதுகாப்புப் படை இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் தலைமையில், சப் இன்ஸ்பெக்டர்கள் வெங்கடாச்சலம், மனோகரன் ஆகியோர் முன்னிலையில், தஞ்சாவூர் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த துண்டுப் பிரசுரங்கள் நேற்று விநியோகிக்கப்பட்டன.
அப்போது, சென்னையில் இருந்து வந்த சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறிய பாதுகாப்புப் படை போலீஸார், பயணிகளுக்கு முக்கவசம் வழங்கி, விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இதையடுத்து, ரயில் நிலைய நடைமேடையில் பாதுகாப்புப் படை கலைக்குழுவினர் தப்பாட்டம் அடித்து, ஆடி, பாடி, தத்ரூபமாக நடித்துக் காட்டி, கரோனா வராமல் இருக்க எந்த மாதிரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும் என கலைநிகழ்ச்சி மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT