Published : 09 Apr 2021 03:13 AM
Last Updated : 09 Apr 2021 03:13 AM
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே செம்மங்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் முருகசேன், விவசாய கூலித் தொழிலாளி. இவரது மனைவி மகேஸ்வரி. இவர்களின் மகன் அருண்குமார்(22), துபாயில் உள்ள தனியார் நிறுவனத்தில் கடந்த 2 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், கடந்த 4-ம் தேதி பெற்றோருடன் அருண்குமார் செல்போனில் பேசியிருந்த நிலையில், கடந்த 6-ம் தேதி மதியம் 12.30 மணியளவில் துபாயில் உள்ள அருண்குமார் இறந்துவிட்டதாக, அவரது பெற்றோருக்கு செல்போன் மூலம் தகவல் வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர், அந்த செல்போன் எண்ணுக்கு மீண்டும் தொடர்பு கொண்டபோது, அந்த எண்ணுக்கு இணைப்பு கிடைக்கவில்லை.
இதையடுத்து, துபாயில் பணியாற்றி வந்த தங்கள் மகன் அருண்குமாரின் நிலை குறித்து விசாரித்து, உரிய தகவல் அளிக்கும்படி தஞ்சாவூர் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று முருகேசன்-மகேஸ்வரி தம்பதியர் மனு அளித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT