Published : 09 Apr 2021 03:13 AM
Last Updated : 09 Apr 2021 03:13 AM

விபத்துகளில் இருவர் உயிரிழப்பு :

கருங்கல் அருகே உள்ள கண்டவிளையைச் சேர்ந்தவர் ஏசுராஜன். இவரது மனைவி தெரசம்மாள்(55). இவர் நேற்று வீட்டில் இருந்து கடைக்கு செல்வதற்காக சாலையோரம் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் காயம் அடைந்த அவர் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கருங்கல் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாகர்கோவில் அப்டா சந்தை முன்பு நேற்று காலை 35 வயது மதிக்கத்தக்க ஒருவர் சாலையை கடந்தபோது லாரி மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவர் யார்?, எந்த ஊர் ? என்ற விவரம் உடனடியாக தெரியவில்லை. நாகர்கோவில் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x