Published : 09 Apr 2021 03:13 AM
Last Updated : 09 Apr 2021 03:13 AM

பெண் காவலரிடம் நகை பறிக்க முயற்சி :

நாகர்கோவில்

கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே கீழ்குளம் ஆனான்விளையை சேர்ந்தவர் சதீஷ். இவரது மனைவி பெர்லினிஷா(35). காவலரான இவர் கருங்கல் காவல் நிலையத்தில் பணியாற்றுகிறார்.

இவர், நேற்று முன்தினம் இரவு பணிமுடிந்து மொபட்டில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்த நபர், இனயம் பகுதியில் வைத்து பெர்லினிஷாவின் கழுத்தில் கிடந்த 11 பவுன் சங்கிலியை பறிக்க முயன்றுள்ளார்.

இதனால் நிலைதடுமாறிய பெர்லினிஷா மொபட்டில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார். அதன் பிறகும் அந்த நபர் நகையை பறிக்க முயலவே பெர்லினிஷா கூச்ச லிட்டுள்ளார்.

அவரது சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் அங்கு திரண்டதையடுத்து அந்த நபர் அங்கிருந்து தப்பி சென்று விட்டார்.

மொபட்டில் இருந்து கீழே விழுந்ததில் பெர்லினிஷாவுக்கு காயம் ஏற்பட்டது. இதுகுறித்து புதுக்கடை போலீஸார் விசாரணை நடத்தி, நகை பறிக்க முயன்ற நபரை தேடி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x