Published : 09 Apr 2021 03:13 AM
Last Updated : 09 Apr 2021 03:13 AM
தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து நிலக்கரி ஏற்றிக் கொண்டுமதுரைக்கு லாரி சென்று கொண்டிருந்தது. அதிகாலை எட்டயபுரம்தேசிய நான்குவழிச் சாலையில்சென்றபோது நிலை தடுமாறிய லாரி, சாலையின் நடுவில் உள்ள தடுப்பில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. லாரியில் இருந்தநிலக்கரி சாலையில் கொட்டியது.எட்டயபுரம் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று காயமடைந்த லாரிஓட்டுநர் உசிலம்பட்டி வட்டம்சொட்டநாயக்கனூர் புதுப்பட்டியைச் சேர்ந்த விஜயராஜனை(40) மீட்டு எட்டயபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். போக்குவரத்தை மாற்றுப்பாதையில் திருப்பிவிட்டு, சாலையில் கொட்டிக்கிடந்த நிலக்கரி அகற்றப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT